பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்165

New Page 1
கூடு தனித்திருக்கும்படி, அதில் உள்ள பறவை பறந்து போவது
போன்றதாகும் உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு’’ என்பது
திருக்குறள். இக்குறளின் கருத்து,
 
  ‘‘குடம்பை தனித்தொழியப் புள்பறந்து அற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள்;-வாளாதே
சேக்கைமரன் ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
 
என்ற நாலடிப் பாட்டிலே காணப்படுகின்றது. சேக்கை-கூடு.
 
  ‘‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று எல்லாம்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
 

தவம் செய்பவரே தம்முடைய கடமையைச் செய்கின்றவர்; தவம்
செய்யாதவர்கள் இவ்வுலக இன்ப ஆசையிலே அகப்பட்டுக்கொண்டு வீண்
செயல்களைச் செய்கின்றவர் ஆவர்’’ இத்திருக்குறளின் கருத்தை
 

  ‘‘நிலையாமை நோய்மூப்புச் சாக்காடு என்றெண்ணித்
தலைஆயார் தம்கருமம் செய்வார்’’
 
என்ற நாலடி வெண்பாவிலே காணலாம்
 
  ‘‘பகை, பாவம், அச்சம், பழி யென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்
 
பிறன் மனையாளிடம் நெறிதவறிச் செல்கின்றவனிடம், பகை, பாவம்,
பயம், பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் நீங்காமல் நிலைத்திருக்கும்’’ என்பது திருக்குறள்.
 
‘‘அறம், புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா-பிறன்தாரம்