பக்கம் எண் :

168சாமி சிதம்பரனார்

New Page 1

‘‘இடுநீற்றல் பை அவிந்த நாகம்; (பா.66) முன்னே போட்ட திருநீற்றால்
படம் அடங்கிய பாம்பு’’ என்பது இதை உணர்த்துகின்றது.

நாலடியார் காலத்திலே நல்ல நாள் பார்த்து அந்நாளிலே திருமணம்
செய்யும் வழக்கம் இருந்தது. திருமணக் காலத்தில் பலரும் அறியும்படி
வாத்தியங்கள் முழங்கும்.
 

  ‘‘பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க மெல்இயல்.
 

பலரும் அறியும்படி பறையடித்து, நல்ல நாள் கேட்டு, கல்யாணம்
புரிந்துகொண்டு மனைக்குள் புகுந்த மெல்லிய தன்மையுடையவள்’’

(பா.85)

பறையடிப்பதிலே மணப்பறை, பிணப்பறை என்று இரண்டு வகைப்
பறைகள் உண்டு; மணம் செய்யும் போது அடிக்கும் பறை மணப்பறை;
இறந்தவர்க்காக அடிக்கப்படும் பறை பிணப்பறை.
 

  மன்றம் கறங்க மணப்பறை ஆயின
அன்றுஅவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப் பின்றை
ஒலித்தலும் உண்டாம்.                              (பா.23)
 

கல்யாண மண்டபம் முழுதும் ஒலிக்கும்படி மணப்பறையாக
அடிக்கப்பட்ட பறை. அன்றே, அவருக்கு அவ்விடத்திலே பிணப்பறையாக
மாறி ஒலிக்கவும் கூடும்’’.

தீவினை செய்தவர்கள் தாம் செய்த தீவினைகளின் பயனை மீண்டும்
பிறந்து அனுபவிப்பார்கள். இந்த நம்பிக்கை நாலடியார் பாடல்களில்
காணப்படுகின்றது.
 

  ‘‘அக்கே போல் அங்கை ஒழிய விரல் அழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே,-அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்                 (பா.123)