பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்169

New Page 1

சங்குமணியைப் போன்ற வெள்ளையான எலும்புடன் உள்ளங்கை மாத்திரம்
இருக்க, ஏனைய விரல்கள் எல்லாம் அழுகித், துன்பத்தைத் தரும்
தொழுநோயால் வருந்துவர். முன்பிறப்பிலே நண்டைக் காதலித்து அதன்
காலை முறித்துத் தின்ற பழவினையின் கொடுமை வந்தால் இவ்வாறு
துன்புறுவர்’’. தொழுநோய்- குட்டநோய். தொழுநோய்க்குக் காரணம்
பழந்தீவினைதான் என்று உரைத்தது இச்செய்யுள்.

சீதேவி, மூதேவி, கலைமகள், இலக்குமி, இந்திராணி, சிவன், திருமால்,
கூற்றுவன் முதலிய தெய்வங்கள் நாலடியாரிலே காணப்படுகின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே இன்றும் நாலடியார் ஒரு சிறந்த
நூலாகக் காணப்படுகின்றது. இந்நூலிலே கூறப்படும், நீதிகளும், அறங்களும்
அனைவர்க்கும் பொதுவானவை.