19. திருக்குறள்
திருக்குறள் மாண்பு
திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர்; பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களிலே
தலைசிறந்து விளங்குவது திருக்குறள். இந்நூல் வரிசையால்
முப்பால் என்ற
பெயரால்
திருக்குறள் குறிக்கப்பட்டிருகின்றது; இந்நூல்
வரிசையிலே முதலில்
தோன்றியது திருக்குறள்.
பதினெண் கீழ்க்கணக்கில்
உள்ள, இன்னா நாற்பது,
இனியவை நாற்பது, நான்மணிக் கடிகை,
திரிகடுகம்,
ஏலாதி, முதுமொழிக் காஞ்சி,
பழமொழி, நாலடியார் ஆகியவைகள் எல்லாம்
திருக்குறளுக்குப் பின் தோன்றிய
நூல்களாகத்தான் இருக்க வேண்டும்.
திருக்குறளின்
கருத்துக்கள் பல
இந்நூல்களிலே காணப்படுகின்றன.
இன்று தமிழில் உள்ள நூல்களிலேயே திருக்குறள்தான் உலகப்
புகழ்பெற்ற
நூலாக
விளங்குகின்றது. உலக மக்கள் அனைவரும்
திருக்குறளைப்
போற்றுகின்றனர். அதில் உள்ள
உயர்ந்த
கருத்துக்களைப்
பாராட்டுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்
தோன்றிய
திருக்குறளில் உள்ள
பல
அறங்கள் இன்றைக்கும் பொருந்துவனவாயிருப்பது
இதற்கொரு காரணம்.
அன்றியும் திருக்குறளின் பெருமைக்கு மற்றொரு சிறந்த காரணம்
உண்டு. இந்நூலிலே கூறப்படும்
கருத்துக்கள் உலக மக்கள் அனைவரும்
ஒத்துக்கொள்ளக் கூடியவை. இந்நூல் குறிப்பிட்ட ஒரு மதத்தினர்க்கோ
ஒரு
இனத்தினர்க்கோ, ஒரு
|