இந்நூலின் செய்யுட்கள்
அவ்வளவு கடினமானவையும் அல்ல; மிக
எளிமையானவையும்
அல்ல; நடுத்தரமானவை.
படிக்கப் படிக்கச் சுவை
பயப்பனவே. இவைகள் கற்பனையிலும்,
கருத்திலும் சிறந்த செய்யுட்கள்.
இந்நூலின் பாடல்களைக் கொண்டு பண்டைத் தமிழர்
பழக்க வழக்கங்கள்
சிலவற்றையும்
காணலாம்.
பாட்டுச் சிறப்பு
‘‘மழைநாளில் திரும்பி வந்துவிடுவேன்’’ என்று
காதலியிடம் உறுதிமொழி
உரைத்துவிட்டுப் பொருள் தேடப் போயிருந்தான் காதலன். மழைக்காலம்
வந்துவிட்டது.
அதைக் கண்டான் அவன். ‘‘நான் சொல்லிய கார்காலம்
வந்துவிட்டது; காதலி என்னைக்
காணாமல் நெஞ்சங்கலங்குவாள்; விரைந்து
செல்ல வேண்டும்’’ என்று எண்ணினான்.
உடனே தேர்ப்பாகனிடம்
கீழ்
வருமாறு உரைத்தான்:
‘‘தேர்ப்பாகனே, தேர் விரைவாகப்
போகட்டும். அவள் மழையால்
செழித்திருக்கும்
காட்டின் அழகைக் காண்பாள். கற்பின் சிறப்பால்
தன்
துக்கத்தை அடக்கிக் கொள்ளுவாள்.
கன்னத்திலே கையை ஊன்றிக் கொண்டு
கவலைபடிந்த முகத்துடன்
என்னை எதிர்பார்த்து
நிற்பாள். ஆகையால்
தேரை விரைவாய் ஓட்டுக’’ என்றான்.
|