வேலைக் கையிலேந்தி ஆடுகின்ற பூசாரியை அழைத்து,
ஆட்டுக்குட்டியை அறுத்து, அதன் இரத்தத்தை நாற்றிசைகளிலும் சிந்தி,
இவ்வாறு முருகனுக்குப் பூசைபோடுவதாகிய தொழிலில் ஈடுபட்டு
வருந்துகின்றாள் எனது தாய்’’.
இறந்த வீரர்களுக்கு அவர்களின் நினைவாகக் கல் நடுவார்கள். இது
பண்டை வழக்கம். இதனை
‘‘நடுகல்-விரிநிழல் கண்படுக்கும்
வெம்கானம்’’
என்பதனால் காணலாம். ‘‘வீரர்களுக்காக நடப்பட்டிருக்கும்
கல்லின் விரிந்த நிழலிலே
|