பக்கம் எண் :

26சாமி சிதம்பரனார்

New Page 1

சிதைவின்றி அப்படியே இருக்கின்றன. நெய்தல் திணையைப் பற்றிய
பன்னிரண்டு வெண்பாக்களும் அப்படியேயிருக்கின்றன. மூன்றாவது
வெண்பாவில் இரண்டாவது அடியில் ந என்ற ஒரு எழுத்து மட்டும்
சிதைந்திருக்கின்றது. ஆதலால் இதைச் சிதைவு என்று
சொல்ல முடியாது.

அகத்திணை நூல்களிலே இதுவும் ஒரு சிறந்த நூல்; ஒவ்வொரு
நிலத்திலும் உள்ள இயற்கைக் காட்சிகளை அழகாக எடுத்துரைக்கின்றது.
இந்நூற் பாடல்கள் முழுவதும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின்
அறுபதாவது பாட்டிலே தென்னவனும், கொற்கை நகரும் காணப்படுகின்றன.
இச்செய்யுள் பாண்டியன் வெற்றியைப் பாராட்டுகின்றது. இதைக் கொண்டு
இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்த ஒரு புலவர் என்று எண்ணலாம்.
 

  ‘‘வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி அருவி கொண்ர்ந்திடூஉம்
 
 
(பா.27)
 
தீயால் வெந்த புனத்திலே, அத்தீயில் சிக்கி மடிந்த உயிர்களின்
பிணநாற்றம் வீசுகின்றது. அந்தப் பிணநாற்றம் மறையும்படி மலையிலிருந்து
விழும் அருவிநீர் சந்தனத்தை ஏந்திக்கொண்டு வருகின்றது’’ என்பது
குறிஞ்சித் திணையின் சிறப்பைக் குறித்த பாடல்.
 
  ‘‘பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்
காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்.
 

 

பாசி படர்ந்து பசுமையாகக் காணப்படுகின்ற சுனை; அதன் பக்கத்தில்
உள்ள பள்ளத்திலே ஊறிக் கிடக்கும் பழைய தண்ணீர்; அந்த நீரைச்
சினமுள்ள குரங்கொன்று அள்ளி அருந்துகின்றது; மரத்தில் உள்ள
கனியையும் பறித்துத் தின்று சுவைக்கின்றது’’. இதுவும் குறிஞ்சி நில
இயற்கைக் காட்சி.