‘‘பயம்இல்
யாழ்ப்பாண! பழுதாய கூறாது
எழு! நீபோ! நீடாது; மற்று. (பா.46)
பயனற்ற சொற்களைப் பேசும் யாழ் வாசிக்கும் பாணனே! குற்றமுள்ள
பொய்
மொழிகளைப்
பேசாமல் நீ எழுந்து போ! இங்கே தாமதிக்காதே’’
‘‘பொய்ப்பாண!
இருக்க! எம் இல் உள் வரல் (பா.47)
பொய் சொல்லும் பாணனே! அப்படியே இரு! எம் வீட்டுக்குள்ளே
வரவேண்டாம்’’.
இவ்விரண்டு
செய்யுட்களும் பொய் பேசுவதைத்
தமிழர்கள்
எவ்வளவு வெறுத்தனர்
என்பதைக் காட்டும்.
பல்லி சொல்வதைத் தமிழர்கள் நம்பினர். பல்லி சொல்லுக்குப் பலன்
உண்டு என்று
எண்ணினர்; இதனை இந்நூலின் 18-வது செய்யுளில்
அறியலாம். இத்தகைய பல
கருத்துகொண்ட சிறந்த நூல் ஐந்திணை
அறுபது.
|