பக்கம் எண் :

32சாமி சிதம்பரனார்

இயற

இயற்கைக் காட்சிகளையும், இனிமையையும் காணலாம். அழகிய
கற்பனைகளும்அமைந்திருக்கின்றன.

செய்யுட் சிறப்பு

தலைவியிடம், அவள் காதலனைப் பழித்துப் பேசினாள் தோழி.
அதைத் தலைவியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ‘‘தலைவன்
இரக்க சிந்தை படைத்தவன்; அவன் என்னை என்றும் கைவிட்டு
விடமாட்டான்; அவன் நம்மைக் கைவிட்டாலும், நாமாக அவனை விட்டுப்
பிரிய மாட்டோம்’’ என்று கூறினாள்.

‘‘காட்டுப் பசு ஒன்று மேய்ந்துகொண்டிருக்கின்றது. ஒரு குரங்கு, தானே
பழுத்து முதிர்ந்த பலாப் பழத்தின் சுளைகளை நன்றாகத் தின்றது. பழம்
சாப்பிட்டபின் பால் சாப்பிட வேண்டும் அல்லவா? ஆகையால் அந்த மந்தி,
அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மடியிலே வாய் வைத்துப் பால்
குடிக்கத் தொடங்கியது. பசு, அந்தக் குரங்கைத் திரும்பிப் பார்க்கவில்லை.
தன் கன்றுதான் பால் குடிக்கிறது என்று நினைத்துக்கொண்டு
பாலைச் சுரந்து நின்றது. இத்தகைய பார்க்கத் தகுந்த காட்சியமைந்த அழகிய
மலைநாடன் அவன். அவனை எக்காலத்திலும் நம் உயிருள்ள வரையிலும்
விட்டுப் பிரிவதில்லை’’ என்றாள் தலைவி. இப்பொருள் பொதிந்த
பாட்டுத்தான் கீழ் வருவது.
 

  மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுவந்து மந்தி, முலைவருடக், கன்றுஅமர்ந்து
ஆமா சுரக்கும், அணிமலை நாடனை
யாமாப் பிரிவது இலம் (பா.4)
 

இச்செய்யுளில் பசுவின் தன்மை குறிக்கப்பட்டுள்ளது. அது
விரும்பினால்தான் தன் கன்றுக்குப் பால்தரும்; விரும்பாவிட்டால், கன்று
ஊட்டினால்கூட, பாலைச் சுரக்காமல் அடக்கிக்கொள்ளும்; இத்தன்மை
பசுவுக்கு உண்டு.