கற்புள்ள பெண்கள் தங்கள் கணவனையே உயிர் என்று கருதியிருந்தனர்.
அவன் உயிர்
வாழ்ந்தால் தான்
தாம் உயிர் வாழ்வர். அவன் வீழந்தால்
தாமும் வீழ்வர். இதை விளக்கும்
செய்யுள் கீழ்வருவது;
|
|
‘‘குறை ஒன்று உடையேன்மன் தோழி! நிறையில்லா
மன்உயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே;
அராவழங்கும் நீள்சோலை நாடனை, நம் இல்
இராவாரல்! என்பது உரை! (பா.14)
|
தோழியே எனக்கு ஒரு குறையுண்டு; அது நின்னால்தான்
முடியவேண்டும்; என்பால் நிலையில்லாமல்
இருக்கும் என்னுயிர்க்கு ஒரு
பாதுகாவலைச் செய்யவேண்டும்;
இப்பொழுதே அதைச் செய்யவேண்டும்.
நமது
தலைவன் பாம்புகள் திரிந்து
கொண்டிருக்கின்ற நீண்ட
சோலையையுடைய நாட்டின் தலைவன்; அவனிடம்
அச்சோலையை இரவிலே
கடந்து நம் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறவேண்டும்’’
என்றாள்.
இதனால்
காதலும் கற்பும்நிறைந்த மாதரின் இயல்பைக் காணலாம்.
முயற்சியினாலேயே செல்வம் உண்டாகும். பெரிய சிறந்த முயற்சிக்கு
ஏற்றாற்போல்
சிறந்த
செல்வம் கைகூடும். இதுவே பண்டைத்தமிழர்
நம்பிக்கை.
|
|
பெருந்தகு
தாளாண்மைக் கேற்ப
அரும்பொருள் ஆகும். (பா.29)
|
செல்வத்திலேயே சிந்தையைச் செலுத்தியவர்கள் எப்பொழுதும் அதைச்
சேர்ப்பதிலேயே
குறியாய் இருப்பார்கள்; அவர்கள் சிறிதும் இரக்கம்
காட்டமாட்டார்கள்; தயவு தாட்சண்யம்
என்பது
எள்ளளவும் அவர்களிடம்
இராது. ‘‘தாட்சண்யம் தனநாசம்’’ என்பதைப் பின்பற்றி
நடப்பர்.
|
|
‘‘மெல்லியல்,
கண்ணோட்டம் இன்றிப் பொருட்கு இவர்ந்து
நில்லாத உள்ளத் தவர். (பா.30) |