இச்செய்யுளின் வழியாகத் தமிழரின் நன்றி மறவாத உயர்ந்த
பண்பாட்டைக்
காணலாம்.
தமிழரின் பண்பாட்டைக் குறிக்கும் மற்றொரு
பாடலையும் கீழே காண்போம்.
களவு மணவாழ்க்கையிலே வாழும் தம்பதிகள் இருவர். அவர்கள் தம்
களவு
வெளிப்படுவதற்கு முன்பு கற்பு மணத்தம்பதிகளாகி விடவேண்டும்
என்று முடிவு செய்தனர்.
இதன்பின்
தலைவன், தன் காதலியை அவளுடைய
பெற்றோர் அறியாமல் தன்னுடன்
அழைத்துக் கொண்டுபோய் விட்டான்.
கருத்து ஒருமித்த காதலர்கள் மணம் புரிந்து
கொள்ளுவதற்கு,
ஏதேனும்
தடை ஏற்பட்டால், இவ்வாறு செய்வது பண்டைக் கால வழக்கம்.
தலைவியை வீட்டிலே காணாத செவிலித்தாய், அவளைத்
தேடிக்கொண்டு
புறப்பட்டாள். பாலை நிலத்தின்
வழியே அவள்
போகும்போது எதிரிலே வந்த மற்றொரு
தம்பதிகளைப் பார்த்தாள்.
அவர்களிடம்
‘‘உங்களைப்போல் இருவரை இவ்வழியிலே
கண்டீரோ’’ என்று கேட்டாள். அவள் கேள்விக்கு ஆடவன்
விடையளித்தான்.
‘‘விரைவாக நீங்கள்
நடந்து போங்கள். அவர்கள் நம்மிடம்
அகப்பட்டுக்
கொள்ளுவார்கள்; நீங்கள் எண்ணும் எண்ணமும்
|