7. கார்நாற்பது
நூல் வரலாறு
கார் காலத்தைப்பற்றிக் கூறுவது; நாற்பது வெண்பாக்களைக் கொண்டது.
கார்
நாற்பதாகும்.
கார், கருமை நிறம், மழை பெய்யும் மேகம் கருமை நிறம் உள்ளது.
கருமை நிறம்
உள்ள மேகம் மழை பெய்யும் காலம் கார் காலம். கார் காலம்
முல்லை நிலத்திற்கு உரியது.
ஆகவே
இது முல்லைத் திணையைப்பற்றி
உரைப்பதாகும்.
ஒரு தலைவன் ஏதேனும் ஒரு காரணத்தால் மனைவியை விட்டுப் பிரிந்து
செல்லுகின்றான்; செல்லும்போது ‘‘நான் கார் காலம் வருவதற்குள்
வந்துவிடுவேன்’’ என்று
உறுதி
கூறிச் செல்கின்றான். கார் காலமும்
வந்துவிட்டது. கணவன் வரவில்லை.
அப்பொழுது மனைவி, அவன் வருவான்
என்று நம்பித் தன் துன்பத்தைப் பொறுத்துக்
கொண்டிருக்கின்றாள்.
இதுவே
முல்லைத் திணை நிகழ்ச்சியாகும்.
காட்டின் காட்சி; மழை நாளின் இயற்கை; காதலியின் அன்பு;
கணவனுடைய காதல்;
இவைகளையெல்லாம்
முல்லைத்திணையிலே
காணலாம். இந்த நூலின் ஆசிரியர்
மதுரைக்கண்ணங்கூத்தனார்
என்பவர்.
இவர் பெயர் கூத்தனார்; இவர் தந்தையார்
பெயர்கண்ணன்.
தந்தையார்
பெயரையும் தன் பெயரோடு சேர்த்து வைத்துக் கொண்டார்.
இப்படிப் பெயர் வைத்துக்கொள்வது
பண்டை மரபு. இவர் மதுரையில்
வாழ்ந்தவராகவோ
அல்லது பிறந்தவராகவோ இருக்க வேண்டும்.
ஆதலால்தான்
மதுரைக்கண்ணங்கூத்தனார்
|