செல்வச் சிறப்பு
செல்வம் உள்ளவர்களே வாழ்க்கையில் இன்பம் அடைய முடியும்; புகழ்
உள்ளவர்களாக
வாழ முடியும்; செல்வம் இருந்தால்தான் வறியோர்க்கு
வழங்கி உதவி செய்யலாம்; ஆதலால்
இல்லறத்தில்
வாழ்வோர்
பொருளீட்டுவதை முதன்மையாகக் கொள்ளவேண்டும். இது
இவ்வாசிரியர்
கருத்து.
|
|
‘‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்
|
இம்மை மறுமை இன்பங்கள் பொருந்துவதற்குரிய செல்வத்தைத்
தேடிக்கொண்டுவரும்
பொருட்டுச் சென்றார்’’
(பா.11)
|
|
‘‘கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போல்
படாஅமகிழ் வண்டு பாண்முரலும்
|
அழியாத புகழை விரும்புகின்ற செல்வர்களின் சிந்தையைப்போல,
கெடாத மகிழ்ச்சியை
உடைய வண்டு இசை பாடிக்கொண்டிருக்கும்” (பா.32)
இவைகள் செல்வத்தால் பெறும் இன்பத்திற்கு எடுத்துக் காட்டுக்கள்.
|
|
‘‘நச்சியார்க்கு ஈதலும் நண்ணார்த் தெறுதலும்
தன்செய்வான் சென்றார்.
|
தம்மை நாடி வந்தவர்க்குக் கொடுப்பதும், பகைவரை அழிப்பதும்
தமக்குப் புகழ்தரும்
என்று நினைத்துப் பொருள் தேடச் சென்றார்’’. (பா.7)
|
|
‘‘மண்இயல் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்இயல் நல்லாய் பிரிந்தார்.
|
பெண்தன்மை நிறைந்த சிறந்தவளே! அவர் இவ்வுலகிலே நிலையான
புகழைப்பெற
விரும்பியே பொருள் தேடப் பிரிந்தார்’’
(பா.8)
|