பக்கம் எண் :

50சாமி சிதம்பரனார்

New Page 1

இவைகள் செல்வமே புகழுக்குக் காரணம் என்பதை எடுத்துக் காட்டின.

பழக்க வழக்கங்கள்

இந்நூலாசிரியர் காலத்திலே தமிழ்நாட்டிலே வேள்விகள் நடைபெற்று
வந்தன. ‘‘புகழ் வேள்வித் தீப்போல எச்சாரும் மின்னும் மழை’’
‘‘புகழுக்குரிய யாகாக்கினிபோல, மேகம் எப்பக்கமும் ஒளிவீசும்படி
மின்னுகின்றது’’(பா.51) திருமால், பலதேவன் ஆகிய தெய்வங்களைப் பற்றி
இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கி்ன்றார். பொரு கடல் வண்ணன்
(பா.1) என்பது திருமால். ‘‘நாஞ்சில் வலவன்’’ (பா.19) என்பது பலதேவன்.

கார்த்திகை நாளிலே வரிசையாக விளக்கு வைத்து விழாக்
கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. இதனை
 

  நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி.       (பா.26)
 

நன்மை மிகுந்த கார்த்திகைத் திருநாளில் நாட்டினர் கொளுத்தி வைத்த
முதல் நாள் விளக்குகளைப் போல, தோன்றிப் பூக்கள், எல்லா இடங்களிலும்
அழகுடன் பூத்திருந்தன’’ இத்தகைய சிறந்த செய்திகளைக் கார் நாற்பதிலே
காணலாம்.