பக்கம் எண் :

New Page 1

8. களவழி நாற்பது

நூலின் சிறப்பு

களவழி நாற்பது என்றால் களத்தைப் பற்றிப்பாடிய நாற்பது என்று
பொருள். இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும். ஆனால்
இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றன. எப்படியோ ஒரு வெண்பா வந்து
சேர்ந்து விட்டது. வெண்பாவிலே நாலு அடிகளுக்கு மேல் வருமாயின்
அதைப் பஃறொடை வெண்பா என்பர். இந்நூலில் பஃறொடை
வெண்பாக்களும் இருக்கின்றன. பஃறொடை-பல்தொடை; பல அடிகள்
தொடர்ந்திருப்பவை.

களவழிப் பாடல்களிலே இரண்டு வகையுண்டு. உழவர்கள்
நெற்கதிரை அறுத்துக் களத்திலே கொண்டுவந்து சேர்த்து. அடித்து,
நெல்லைக் குவிக்கும் ஏர்க்களத்தைப் பாடுவது ஒன்று. நால்வகைப்
படைகளையும் கொண்டு போர் செய்யும் போர்க்களத்தைப் பாடுவது
மற்றொன்று. ஏர்க்களம், போர்க்களம் இந்த இரண்டைப் பற்றியும் பாடும்
பாடல்களுக்கும் களவழிப் பாடல்கள் என்று பெயர்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இந்தக் களவழி
நாற்பது போர்க்களத்தைக் குறித்துப் பாடப்பட்டது.

சோழன் செங்கண்ணான் என்பவன், சேரமான் கணைக்கால்
இரும்பொறை என்பவனுடன் போர்புரிந்தான். இந்தப் போர் கழுமலம்
என்னும் ஊரிலே நடந்தது. இப்போரில் சேரன் தோற்றான்; சோழன்
வென்றான். தோற்ற சேரன் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். சேரனுடைய
நண்பர்.