பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்59

New Page 1

இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் கூடலூர் கிழார் என்பது. இவரைப்
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்று அழைப்பர்.
எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் இவரேதான்.
மலை நாட்டிலேயுள்ள கூடலூரிலே வாழ்ந்தவர். ஆதலால் இப்பெயர்
பெற்றார். குறுந்தொகையிலே மூன்று பாட்டுக்களும், புறநானூற்றிலே
ஒரு பாட்டும் இவர் பெயரால் காணப்படுகின்றன. இந்தக் கூடலூர் கிழார்
வேறு; முதுமொழிக்காஞ்சியைச் செய்த கூடலூர் கிழார் வேறு என்று
கூறுவோரும் உண்டு.

நீதிகளின் சிறப்பு

இந்நூலிலே கூறப்பட்டிருக்கும் அறங்களிலே புதுமையில்லை. தமிழில்
உள்ள நீதி நூல்களில் காணப்படும் அறங்கள்தாம் இந்நூலில் சுருக்கமாகக்
கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவ்வறங்கள் மக்கள் பின்பற்ற
வேண்டியவை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றார் இவ்வாசிரியர்.
வலியுறுத்திச் சொல்லுவது ஒன்றுதான் இதில் உள்ள சிறப்பு.

      ‘‘ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
       ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் எல்லா மக்களுக்கும்
கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்ததாகும்’’ (பா.1) ஒழுக்கத்தின்
உயர்வையும் அவசியத்தையும் வலியுறுத்தியது இச்செய்யுள்.

    ‘‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
     குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று

உயர்ந்த குடிப் பிறப்பைக் காட்டிலும் கல்வியே சிறந்ததாகும்’’ (பா.7)
கல்விகற்றவர்கள் எக்குடியினராயினும் உயர்ந்தவர்கள். கல்லாதவர்கள்
எக்குடியினராயினும் இழிந்தவர்கள். ஆதலால் எல்லா மக்களும்
கல்விகற்பாராயின்