செங்கோல் முறையில்லாத நாட்டிலே இருந்துகொண்டு, அவர்
கொடுங்கோன்மையைப்
பழிக்கமாட்டார்கள்’’
(3-பா.9) இவை அரசியலைப்
பற்றிக் கூறியவை. கொடுங்கோலன்
நாட்டில்
குடியிருப்பதை விட
அந்நாட்டை விட்டு வெளியேறுவதே நலம், என்பது
பண்டைத்தமிழர்
கொள்கை. இது அரசன் சர்வாதிகாரியாகப் பலம் பெற்றிருந்த காலத்தில்
எழுந்த நீதி.
மது விலக்கைப் பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது. இத்தகைய
அறவுரைகளைக் கொண்டதே இந்நூல்.
இதில் உள்ள பல சொற்கள் வழக்கில்
இல்லாத பழைய சொற்கள்.
|