பக்கம் எண் :

66சாமி சிதம்பரனார்

New Page 1

கொள்ளுதல்; தன் முன்னே காணப்படும் பல பொருள்களின் மேலும் ஆசை
வைக்கும் சிறுமைக் குணம்; இவைகள் ஒருவனுடைய செல்வத்தைக்
கெடுக்கும் ஆயுதங்களாகும்’’. (பா.38)

ஒருவன் தன் செல்வத்தைச் சிதையாமல் பாதுகாத்துப் பெருக்கிக்
கொள்ள வேண்டுமானால் மேலே கூறிய மூன்று குணங்களையும் விட்டுவிட
வேண்டும். தற்பெருமை கூடாது; கோபம் கூடாது; கண்ட பொருள்கள்
மேலெல்லாம் ஆசைப்படக் கூடாது; என்ற உண்மையைக் கூறிய செய்யுள் இது.

மனைவியின் மாண்பு

இல்லறத்திலே இன்பம் தவழ வேண்டுமாயின் இல்லாள்
கற்புடையவளாயிருக்க வேண்டும். தன் காதலனுக்குக் கூட்டாளியாகவும்,
தாயாகவும், மனைவியாகவும், இருந்து உதவி செய்வதே கற்புள்ள பெண்ணின்

கடமை என்று கூறுகின்றது ஒரு செய்யுள்,
 

  ‘‘நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம்; வைகலும்
இல்புறம் செய்தலின் ஈன்றதாய்-தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி, இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.
 

நல்ல விருந்தினரைப் பாதுகாப்பதனால் கணவனுக்கு நட்பினளாம்;
இல்லறத்தை வழுவாது நடத்தலால் பெற்ற தாயாவாள்; தன் பழமையான
குடும்பம் விளங்குதற்குரிய மக்களைப் பெறுவதனால் மனையாள்; இம்மூன்றும்
கற்புள்ள மனைவி கொண்ட கடமையாகும்’’. (பா.64)

இச்செய்யுள் ஒரு பெண்ணின் கடமை இன்னது என்று எடுத்துக்
காட்டுகின்றது. விருந்தினரைப் பேணுதல்.