பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்67

New Page 1

இல்லறத்தை நன்றாக நடத்தல், பிள்ளைபெறுதல், இதுவே கற்புள்ள
மங்கையின்கடமை என்று கூறப்பட்டது. இது பண்டைத் தமிழர்
இல்லறத்திலே மகிழ்ச்சியும், இன்பமும் தழைப்பதற்குக் கண்டறிந்த
வழியாகும்.

அறமுணர்வோர் பண்பு

அறநெறியே சிறந்தது; அந்நெறியிலே நடப்பதே நமது கடமை; என்று
நினைப்பவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிடம் மூன்று பண்புகள்
முதன்மையாகக் காணப்படும்.

அவர்கள்தம் செல்வத்தைத் தமக்குமட்டும் பயன்படுத்திக்
கொள்ளமாட்டார்கள். வீணாகச் சேர்த்து வைத்து அழகு பார்த்துக்
கொண்டிருக்கவும் மாட்டார்கள். இல்லாமையால் வருந்தும் எளியோர்க்கு
வழங்குவார்கள்; அவர்கள் துன்பத்தை நீக்கி இன்பம்அடைவார்கள்.
இதற்கே தங்கள் செல்வத்தைச் செலவழிப்பார்கள்.

அவர்கள் இவ்வுலக இயல்பை நன்றாக அறிந்திருப்பார்கள். உலகில்
தோன்றும் பொருள்கள் எல்லாம் என்றும் நிலைத்திருப்பன
அல்ல;அழிந்துவிடக் கூடியன; என்ற உண்மையை அறிந்திருப்பார்கள்.
நிலைத்து நில்லாதவைகளை நிலைத்து நிற்பன என்று
எண்ணும் புல்லறிவு அவர்களிடம் இல்லை. இத்தகைய உண்மையறிவு
காரணமாகத்தாமும் என்றோ ஒரு நாள் மாண்டு மடிவது உறுதி என்பதை
மறக்க மாட்டார்கள். ஆகையால் இறப்பதற்கு முன் நல்லறங்களைச்
செய்யவேண்டும் என்ற உணர்ச்சி அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும்.

அவர்கள் எவ்வுயிர்க்கும் தீமை செய்யமாட்டார்கள். பிற உயிர்களைத்
துன்புறுத்தி அதனால் மகிழ்ச்சியடையும் மடமைக் குணம்
அவர்களிடம்இருக்காது. பிறருடைய