பக்கம் எண் :

68சாமி சிதம்பரனார்

New Page 1

உழைப்பைச் சுரண்ட மாட்டார்கள்; செல்வத்தைக் கொள்ளை
கொள்ளமாட்டார்கள். மற்ற மக்கள் மனம் வேதனையடையும்படி
எச்செயல்களையும்செய்யமாட்டார்கள்; இத்தகைய பண்பே குற்றமற்ற
குணமாகும்; தூய தன்மையாகும். இந்த மாசற்ற குணம் அவர்களிடம்
அமைந்திருக்கும்.

வறியோர்க்கு உதவும் செல்வம்; உலகப் பொருள்கள் நிலையற்றவை
என்று அறியும் அறிவு; எவ்வுயிர்க்கும் கொடுமை செய்யாதிருத்தல்;
இம்மூன்றும் அறநெறியை அறிந்தவர்களின் பண்பாகும். இதனை ஒரு
செய்யுள் விளக்கமாகக் கூறுகின்றது. அச்செய்யுள் கீழ்வருவது:
 

  ‘‘இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும், இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க்குள்
 

வறியவர்க்கு அவர் விரும்பும் ஒன்றைக் கொடுக்கும் செல்வம்;
இவ்வுலகில் உள்ள பொருள்களின் நிலையாமையைப் பற்றி நினைக்கும்
நல்லொழுக்கம்; எவ்வுயிர்க்கும், அவைகள் துன்புறும்படியான கொடுமையைச்
செய்யாதநற்குணம்; ஆகிய இம்மூன்றுதன்மைகளும் அறத்தின் உயர்வை
அறிந்தவர்களிடம் உள்ளவை.’’ (பா.68)

அரசியல்

அரசன் நீதியுடன் நடந்தால்தான் நாடு செழிக்கும்; குடிகள்
இன்புறுவர்;என்ற கருத்தை இந்நூலாசிரியர் வற்புறுத்திக் கூறுகின்றார்.

‘‘தான் வாங்கிக்கொள்ளும் பொருளுக்கு ஆசைப்பட்டுக் குடிகளைக்
கொடுமைப்படுத்தும் அரசன் உள்ள நாட்டிலே மழை பெய்யாது’’ (பா.50)