பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்73

New Page 1

‘‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி
         .......பெய்யெனப் பெய்யும் மழை’’          (பா.96)

என்பது ‘‘தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்,
பெய்எனப் பெய்யும் மழை’’ என்ற திருக்குறளின் கருத்தாகும்.

இவ்வாறு திருக்குறளின் கருத்துக்கள் பல, திரிகடுக வெண்பாக்களிலே
காணப்படுகின்றன. பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்களையும்,
சமூகவாழ்க்கையையும் தெரிந்து கொள்ளுவதற்கு இந்நூல் மிகவும்உதவி
செய்கின்றது.