பெரியாரோடு கொண்ட நட்பை விடுவது துன்பம். தம்மால் செய்ய
முடியாத
காரியங்களைச் செய்து முடிப்போம் என்று கூறுவது துன்பமாகும்.
தம்மிடம்
அன்பில்லாதவர்பால் தாம்
அடைந்த துன்பத்தை உரைத்தல்
துன்பமாகும்.
பெருமையுள்ளவர்க்குத் தீமை துன்பமாகும்’’
(பா.25)
இந்த இரண்டு பாடல்களில் உள்ள அறங்கள் சிறந்தவை; என்றும்
மக்களால்
பின்பற்றக்கூடியவை.
பழக்க வழக்கங்கள்
பண்டைத் தமிழகத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் சிலவற்றையும்
இந்நூலிலே
காணலாம்.
பண்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த
நம்பிக்கைகள் சிலவற்றையும் காணலாம்.
|