‘‘மானம் அழிந்தபின்
வாழாமை முன்இனிதே
மானங்கெட்ட பின் உயிர்
வாழ்வதைவிடச் செத்து மடிவதே
சிறந்ததாகும்’’ (பா.14)
‘‘மானம் படவரின்
வாழாமை முன்இனிதே
மானம் கெடும்படியான நிலைமை
வருமாயின், அந்நிலைமை வருவதற்கு
முன்பே இறந்துபடுதல் நன்று’’ (பா.28)
இவைகள், தன்மானத்தின்
பெருமையை எடுத்துக் காட்டின.
அரசன் கடமை
நாடாளும் மன்னவன் எவ்வாறு
நடந்துகொள்ள வேண்டும் என்பதையும்
இந்நூல் எடுத்துரைக்கின்றது. அரசனுக்குக்
கூறப்பட்டிருக்கும் அந்த
அறிவுரை,
அரசன் அற்ற குடி அரசுக்கும் ஏற்றதாகும்.
|