பக்கம் எண் :

82சாமி சிதம்பரனார்

மத

அவ்வுணர்ச்சியை எச்சமயத்திலும் இழந்துவிடுவதில்லை. சிலர் ஆபத்தும்
மனச்சோர்வும் ஏற்படும்போது, அவ்வுணர்ச்சியை விட்டுவிடுகின்றனர்.
எச்சமயத்திலும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதே மனிதத்தன்மை என்று
கூறுகின்றது இந்நூல்.
 
 

‘‘உயிர்சென்று தான்படினும் உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமை போல் பீடுஉடையது இல்
 

பசியினால் உயிரே போவதானாலும், உண்ணத்தகாதவர் கையிலிருந்து
உணவைப் பெற்று உண்ணாத பெருமையே சிறந்தது; அதைப் போன்ற
பெருமை வேறு ஒன்றும் இல்லை’’
 

‘‘மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே

மானங்கெட்ட பின் உயிர் வாழ்வதைவிடச் செத்து மடிவதே
சிறந்ததாகும்’’                                                                        (பா.14)
 

‘‘மானம் படவரின் வாழாமை முன்இனிதே

மானம் கெடும்படியான நிலைமை வருமாயின், அந்நிலைமை வருவதற்கு
முன்பே இறந்துபடுதல் நன்று’’                                              (பா.28)

இவைகள், தன்மானத்தின் பெருமையை எடுத்துக் காட்டின.

அரசன் கடமை

நாடாளும் மன்னவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும்
இந்நூல் எடுத்துரைக்கின்றது. அரசனுக்குக் கூறப்பட்டிருக்கும் அந்த
அறிவுரை, அரசன் அற்ற குடி அரசுக்கும் ஏற்றதாகும்.
 

 

‘‘ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே;
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே;