ஒற்றர்களைக்கொண்டும்
நாட்டிலே நடைபெறும் நிகழ்ச்சிகளைத்
தெரிந்துகொள்ளுதல் சிறந்தது; நீதி வழங்குவதற்கு முன்பே,
தான் நன்றாக
ஆராய்ந்து
உண்மையறிந்து நீதி வழங்குவதே சிறந்தது; ஒரு
சார்பிலே
நிற்காதவனாய், எல்லாவுயிர்களிடத்தும் சமமான நிலையில் நின்று,
எல்லாரிடத்திலும்
உள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்ளுவதே
வேந்தர்களின் கடமை’’
இந்த அறிவுரையைப் பின்பற்றி நடக்கும் அரசாங்கம் எப்பொழுதும்
நிலைத்து நிற்கும்;
மக்களால்
தூற்றப்படாது; போற்றப்படும்.
சிறந்த அறங்கள்
இன்னும் பல சிறந்த அறங்களும் இந்நூலிலே கூறப்பட்டுள்ளன.
அவைகளில்
சிலவற்றைக் காண்போம்.
‘‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’’ என்று நாம்
படித்திருக்கின்றோம்.
தந்தையைத்
தெய்வமாகப் போற்றவேண்டும் என்பதேஇதன் கருத்து.
தந்தைமொழியைத் தட்டவே
கூடாது என்று இன்றும்
சிறுவர்களுக்குச் சொல்லிக்
கொடுக்கின்றோம். இதற்கு மாறான
கருத்தைஇந்நூலிலே காணலாம்
‘‘தந்தை
ஒழுக்கம் அற்றவனாயிருந்தால், -
நீதி இது, அநீதி
இது, என்று
அறியாதவனாயிருந்தால் -
அவனுடைய
சொல்லைக் கேட்கக்கூடாது.
கேட்பதனால் யாதும் பயன் இல்லை’’ என்று கூறுகிறது இந்நூல்.
|