பக்கம் எண் :

86சாமி சிதம்பரனார்

New Page 1
என்பது ‘‘தன் ஊன் பெருக்கற்குத்தான் பிறிதின் ஊன் உண்பான், எங்ஙனம்
ஆளும் அருள்’’ என்ற திருக்குறளின் கருத்தைக் கொண்டதாகும்.
 
  ஆற்றுந் துணையால் அறம் செய்கை
முன் இனிதே              (பா.7)
 

என்பது ‘‘ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே; செல்லும் வாய்
எல்லாம் செயல்’’ என்ற திருக்குறளின் கருத்தாகும்.

மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே       (பா.14)

என்பது ‘‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், உயிர் நீப்பர்
மானம் வரின்’’ என்ற குறளின் கருத்தைக் கொண்டதாகும்.
 

 

நட்டார்க்கு நல்ல செயலின் இனிது எத்துணையும்

ஒட்டாரை ஓட்டிக் கொளல் அதனின் முன் இனிதே    (பா.18)
 

என்பது, ‘‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக்
கொளல்’’ என்ற திருக்குறளின் பொருளை அப்படியே எடுத்துரைக்கின்றது.
இவ்வாறே பல பாடல்களிலே திருக்குறளின் கருத்துக்கள் காணப்படுகின்றன.

இனியவை நாற்பதிலே உள்ள வெண்பாக்கள் அனைத்தும் சிறந்த
கருத்தமைந்தவை; படிப்போர் மனத்திலே அப்படியே பதியக் கூடியவை;
தமிழ் மக்கள் வாழ்க்கைச் சிறப்பைக் காண்பதற்கு இந்நூல் உதவி
செய்கின்றது; அவர்களுடைய ஒழுக்கச் சிறப்பை விளக்கி உரைக்கின்றது.