பெயரைக் கொண்டவை;
ஆதலால் அவைகளின் நடையிலும் கொஞ்சம்
கசப்பும்
காரமும் அமைந்திருப்பது இயற்கை.
நான்மணிக் கடிகையோ
ஒளிபொருந்திய
மணியாரம்; ஆதலால் இதன் செய்யுட்கள்
அவைகளைவிட
ஒளிபெற்று
விளங்குவதும் இயல்புதான். இந்நூலாசிரியர் பெயர் விளம்பி
நாகனார். இவர்
பெயர் நாகனார் இவர் வாழ்ந்த ஊர் அல்லது பிறந்த ஊர்
விளம்பியாக
இருக்கலாம்.
ஆதலால் ஊர்ப்பெயரும் சேர்ந்து விளம்பி
நாகனார் என்று பெயர்
பெற்றார். இவரைப் பற்றிய வேறு வரலாறு ஒன்றும்
தெரியவில்லை.
பாடல்களின் சிறப்பு
எதையும் தெளிவாகக்
கூறுவதே இந்நூல் வெண்பாக்களின் சிறப்பாகும்
சில
வெண்பாக்களைப் படித்தாலே இந்த உண்மையைக்
காணலாம்.
|