திருடுவோம் என்று எண்ணிக் காலம் பார்த்திருக்கும் கள்வர்களுக்கும்
தூக்கம்
இல்லை;
எப்பொழுதும் காதலியிடமே உள்ளத்தை
அடிமையாக்கியிருப்பவர்களுக்கும்
உறக்கம்
இல்லை. சிறந்த செல்வப்
பொருளை
விரைவிலே பெருக்குவோம் என்று எண்ணி
உழைப்பவர்களும்
தூங்கமாட்டார்கள்; உழைத்துச் சேர்த்த பொருளைக்
காப்பாற்றுகின்றவர்களுக்கும் உறக்கம் இல்லை’’ (பா.7) இந்நால்வகையினரும்
தங்கள்
நினைப்பை வேறு இடத்திலே செலுத்தியிருப்பார்கள்; ஆகையினால்
மன
அமைதியுடன்
உறங்க மாட்டார்கள்.
சிலருக்குத் தம்மூர், வேற்றூர் என்ற வேறுபாடே தோன்றாது; எல்லா
வூரையும் தம்மூர்
போலவே எண்ணுவார்கள். அவர்களுக்குத் தம்மூரிலே
கிடைக்கும் அத்தனையும்
வேற்றூரிலும் கிடைக்கும். இத்தகையோர் யார்?
என்று
சொல்லுகிறது ஒரு பாட்டு.
|