பக்கம் எண் :

90சாமி சிதம்பரனார்

New Page 1

கல்வி அறிவு, ஒழுக்கங்களிலே சிறந்த நல்லவர்களுக்கும் தம்முடைய ஊர்
என்று ஓர் ஊர் இல்லை; நன்னெறியிலே நடப்போர்க்கும் தம்முடைய ஊர்
என்று ஓர் ஊர் இல்லை. உயர்ந்தவர்கள் அல்லாத கீழ்மக்கட்கும் தம்முடைய ஊர் என்று ஓர் ஊர் இல்லை; தம் கையிலே செல்வம் உள்ளவர்களுக்கும் எல்லா ஊரும் சொந்த ஊர்தான்’’              (பா.82)

நல்லவர்கள் எல்லா ஊர்களிலும் பாராட்டப்படுவார்கள். உண்மை
ஒழுக்கமுள்ள உயர்ந்தவர்கள் எல்லா ஊர்களிலும் வரவேற்கப் படுவார்கள்.
தீமை செய்யும் கீழ்மக்கள் உள்ளூரிலும், வெளியூர்களிலும்
வெறுக்கப்படுவார்கள். செல்வம் உள்ளவர் எங்கு சென்றாலும்,
பணத்தைக்கொண்டு சொந்த ஊர்போல் வசதி செய்து கொண்டு வாழலாம்.
இக்கருத்தையே இப்பாடல் தெளிவாக உரைத்திருக்கின்றது.

அரசியலைப் பற்றி

அரசாள்வோருக்கு அறிவுறுத்தும் அறவுரைகள் இந்நூலிலே பல உண்டு. அவை ஆளுவோர் தங்கள் உள்ளத்திலே மறவாமல் கொள்ள வேண்டியவை.

‘‘நாட்டு ஆக்கம் நல்லன் இவ்வேந்து என்றல்     (பா.18)

ஒரு நாட்டுக்கு உயர்வு, இந்நாட்டை ஆளும் வேந்தன் நல்லவன்;
என்று குடிமக்களால் பாராட்டப்படுவதாகும்’’

‘‘மண் அதிர்ப்பின் மன்னவன் கோல் அதிர்க்கும்

நாட்டில் உள்ள குடிமக்கள் கலங்குவார்களாயின் மன்னவனது ஆட்சியும்
கலங்கி விடும்; நிலைக்காது’’                                       (பா.19)

‘‘கோல்நோக்கி வாழும் குடி எல்லாம்

குடிகள் எல்லாம் அரசனது செங்கோலை நோக்கியே உயிர்
வாழ்வார்கள்; ஆதலால் நீதி தவறாது ஆட்சிபுரிய வேண்டும்’’         (பா.27)