மழையில்லாவிட்டால் இவ்வுலகில் வாழ்வோருக்கு வாழ்வில்லை;
மழையும்
தவம்
இல்லாதவர்கள் வாழும் இடங்களில் இல்லை; தவமும்
அறநெறியைக்
காக்கும் அரசன்
இல்லாதவிடத்தில் இல்லை; அரசனும்
குடிமக்கள்
இல்லாதவிடத்தில் இல்லை’’
(பா.47)
இச்செய்யுளிலே தவத்தோரால்தான் மழை பெய்கின்றது; தவசிகளைக்
காப்பாற்றுவது அரசன்
கடமை; என்று கூறியிருப்பது பழங்கால மக்கள்
நம்பிக்கை. குடிமக்கள் நன்றாக
வாழாவிட்டால், அரசன்-அரசாட்சி-இல்லை
என்று கூறியிருக்கும் உண்மை என்றும்
அழியாதது.
மேலே கூறப்பட்டிருப்பவை அரசியலைப்பற்றி அறிவுறுத்தும்
உண்மைகள்.
அறவுரைகள்
சினம் கொள்வதால் நன்மையில்லை. ஆத்திரம் அறிவைச் சிதைக்கும்.
உண்மையைக்
காணவிடாது சினத்தை அடக்குவதே அறிஞர் கடமை.
இவ்வுண்மையை வலியுறுத்துகிறார்
இவ்வாசிரியர்.
‘‘எல்லாம், வெகுண்டார் முன் தோன்றாக் கெடும்
எல்லா நன்மைகளும் கோபங்கொள்கின்றவர்களிடம் காணப்படாமல்
அழிந்துவிடும்’’ (பா.8)
‘‘என்றும், விடல்வேண்டும் தம்கண் வெகுளி
எப்பொழுதும், தம்மிடம் உள்ள கோபத்தை விட்டுவிட வேண்டும்;
கோபமே
கூடாது’’(பா.11)
|