பக்கம் எண் :

94சாமி சிதம்பரனார்

New Page 1

உண்டு ஓர் உறுதி கிளைஞரை, நீட்டி அளப்பது ஓர் கோல்’’ என்பது
திருக்குறள். இரண்டும் ஒத்த கருத்துடையன.

‘‘பிறர் செய்த நன்றியை நன்றாக் கொளல் வேண்டும்’’ பிறர்
செய்த நன்றியை மறவாமல் என்றும் மனத்திலே கொள்ள வேண்டும்;
(பா.11)இது நான்மணிக்கடிகை. ‘‘தினைத்துணை நன்றி செயினும்
பனைத்துணையாக், கொள்வர் பயன்தெரிவார்’’ என்பது திருக்குறள். இவை
இரண்டிலும் கருத்தொற்றுமை காணப்படுகின்றது.

‘‘பொருள் பெறினும் நாடாதி, நட்டார் கண் விட்டவினை’’ பெரும்
பொருள் கிடைப்பதாயினும், நண்பர்களின் பொறுப்பிலே செய்வதற்கு
விட்டிருக்கும் தொழிலிலே தலையிடாதே; அதைப்பற்றி ஆராயாதே; (பா.25)
என்பது நான்மணிக்கடிகை, ‘‘தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்,
தீரா இடும்பை தரும்’’ என்பது திருக்குறள். இவ்விரண்டிலும் ஒத்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

‘‘எற்றுள்ளும், இன்மையின் இன்னாதது இல்லை’’ எதனுள்ளும்,
வறுமையைப் போலத் துன்பந்தருவது வேறு ஒன்றுமேயில்லை. (பா.30)
என்பது நான்மணிக்கடிகை. ‘‘இன்னாமையின் இன்னாதது யாது எனின்
இன்மையின் இன்மையே இன்னாதது’’ என்பது திருக்குறள் இவையிரண்டும்ஒத்த கருத்துடையன.

‘‘முன்னம் முகம்போல முன் உரைப்பது இல்’’ ஒருவனுடைய
உள்ளத்தில் இருப்பதை அவனுடைய முகத்தைப் போல முதலில்
தெரிவிப்பது வேறொன்றும் இல்லை; (பா.46) என்பது நான்மணிக்கடிகை.
‘‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’’
என்பது திருக்குறள். இவை இரண்டும் ஒரே கருத்துடையன.