14. சிறு பஞ்சமூலம்
நூல் வரலாறு
சிறு பஞ்சமூலம் என்பது ஒரு மருந்தின் பெயர் மூலம்-வேர். சிறிய ஐந்து
வேர்கள்
என்பதே சிறுபஞ்ச மூலம் என்பதன் பொருள்.
கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி
வேர்,நெருஞ்சி வேர் இவைகளே சிறு பஞ்சமூலம். இந்த ஐந்து வேர்களும்
மருந்துப் பண்டங்கள். இவற்றால் உடல் நோய்கள் பலவற்றைப் போக்க
முடியும்.
இந்த நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து பொருள்கள்
கூறப்படுகின்றன.
அந்த ஐந்து வேர்களும் உடல் நோயை ஒழிக்கும்;
உடம்பை
நன்றாக வைத்திருக்க
உதவிசெய்யும். இந்த நூலில் ஒவ்வொரு
வெண்பாவிலும்
சொல்லப்படும் ஐந்து
பொருள்களும் மக்களின்
மனப்பிணியை மாய்க்கும்;
உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துப்
பாதுகாக்கும்.
இந்தக் கருத்தில்தான்
இந்நூலுக்குச் சிறுபஞ்ச மூலம் என்று பெயர்
வைக்கப்பட்டது.
சிறுபஞ்ச மூலம்; சிறுமை, பஞ்சம், மூலம் என்ற மூன்று மொழிகளைக்
கொண்டது. இந்த மூன்று
சொற்களில் சிறுமை என்னும் ஒரு சொல்தான்
தமிழ்ச் சொல், பஞ்சம், மூலம் என்னும் இரண்டு சொற்களும்
வட சொற்கள்.
நூலின் பெயரிலேயே ஒரு பாகம் தமிழ்ச் சொல்லாகவும், இரண்டு
பாகம்
வடசொல்லாகவும் அமைந்திருப்பது உற்று
|