பக்கம் எண் :

98சாமி சிதம்பரனார்

New Page 1
கண்ணுக்கு அழகு கண்ணாடி அன்று; அல்லது மை தீட்டிக்கொள்வது
அன்று; துன்பப்படும் மக்களிடம் இரக்கங்காட்டுவதே கண்ணுக்கு அழகு;
மதியாதார் தலைவாசலை மிதிப்பதற்குச் செல்லாமைதான் காலுக்கு அழகு; இத்துணை என்று தவறாமல் கணக்கிட்டுக் கூறுதலே கணக்குக்கு அழகாகும்; கேட்பவர்கள் நன்று! நன்று! என்று சொல்லிச் சுவைக்கும்படி
பாடுவதுதான் பாட்டுக்கு அழகாகும்; அரசனுக்கு அழகு தனது நாட்டு
மக்களைத் துன்புறுத்தமாட்டான் என்று சொல்லப்படுவதாகும்’’          (பா.9)
 
  ‘‘மயிர்வனப்பும்; கண்கவரும் மார்பின் வனப்பும்;
உகிர்வனப்பும்; காதின்வனப்பும்; செயிர்தீர்ந்த
பல்லின்வனப்பும்; வனப்பல்ல, நூற்குஇயைந்த
சொல்லின்வனப்பே வனப்பு.
 

தலைமயிரை அழகு செய்துகொள்வது வனப்பன்று; பார்ப்போர்
உள்ளத்தைக் கவரும்படியான அகன்ற எடுப்பான மார்பும் அழகன்று;
சொத்தையில்லாமல் - அழகாக - உருண்டு திரண்டிருக்கும் நகமும்
வனப்பன்று; காதின் அழகும் அழகன்று; சிறிதும் பழுது சொல்ல முடியாமல்
முத்துப்போல் வரிசையாக அமைந்திருக்கும் பல்லும் அழகன்று; தான்
படித்திருக்கும் நூல்களுக்குத் தகுந்தவாறு, அவைகளின் கருத்துக்களைக்
கேட்போர்க்கு விளங்கும்படி எடுத்துரைக்கும் சொல்லின் அழகே அழகாகும்’’
(பா.37) இவை இரண்டு வெண்பாக்களும் மக்களுக்கு அழகைத் தருவன
இவையிவை யென்று தெளிவாகத் தெரிவிக்கின்றன.

ஆள்வோர் கடமை

அரசாள்வோர் கடமையைப் பற்றிப் பல பாடல்களிலே கூறப்படுகின்றன.
அவற்றுள் ஒரு சிறந்த வெண்பா கீழ்வருவது.