தலைமயிரை அழகு செய்துகொள்வது
வனப்பன்று; பார்ப்போர்
உள்ளத்தைக்
கவரும்படியான அகன்ற எடுப்பான மார்பும் அழகன்று;
சொத்தையில்லாமல்
-
அழகாக - உருண்டு திரண்டிருக்கும் நகமும்
வனப்பன்று; காதின் அழகும்
அழகன்று; சிறிதும் பழுது
சொல்ல முடியாமல்
முத்துப்போல் வரிசையாக
அமைந்திருக்கும் பல்லும் அழகன்று; தான்
படித்திருக்கும்
நூல்களுக்குத்
தகுந்தவாறு, அவைகளின் கருத்துக்களைக்
கேட்போர்க்கு விளங்கும்படி
எடுத்துரைக்கும்
சொல்லின் அழகே அழகாகும்’’
(பா.37) இவை இரண்டு
வெண்பாக்களும் மக்களுக்கு அழகைத் தருவன
இவையிவை யென்று
தெளிவாகத் தெரிவிக்கின்றன.
ஆள்வோர் கடமை
அரசாள்வோர் கடமையைப்
பற்றிப் பல பாடல்களிலே கூறப்படுகின்றன.
அவற்றுள்
ஒரு சிறந்த வெண்பா கீழ்வருவது.
|