|
பனுவல் |
2. கடவுளை வேண்டல் |
|
'மாசில் வீணையும்' என்ற மெட்டு |
|
பண் - (பூரிகலியாணி) தாளம் - முன்னை |
|
| உலகம் யாவையும் உள்ளன வாக்கலும் | | நிலைநி றுத்தலும் நீக்கலும் நீங்கலா | | அலகி லாவிளை யாட்டுடை யாய்தனித் | | தலைவா உன்திருத் தாளில்எம் தலையே. |
|
|
| மருளுறும் இந்த மாநிலம் யாங்களே | | தெருளுறும் வண்ணம் தீந்தமிழ்ப் பாணியால் | | பொருளுறும் உன்றன் புகழேபு ரிந்தனம் | | அருளுவாய் இன்றே அறமுது கடலே. |
|
|
| குலமொன் றாகியே கோவேஎம் தந்தையே | | உலக ஆட்சியும் ஒன்றாக வோங்கியெம் | | புலமை யன்பினாற் போரெது மின்றியே | | நலமாய் வாழ்ந்திட நன்மதி யருளே. |
|
3. இறைவணக்கம் |
|
பண் - (பந்துவராளி) தாளம் - முன்னை |
|
| எங்கும் நிறைந்த பொருளே - இன்றருளே |
|
|
| தன்கண் பூதம் ஐந்தும் தங்கும்படி விரிந்தும் | | நுண்பொருளும் நுழைந்தும் நுண்ணியதின் நுணித்தும் (எங்கும்) |
|