|
அ. 1 |
| எங்கும் நிறை இறைவா உன்றன் | | எழிலார் கழல் இணைபணி கின்றேன் (அன்பே) |
|
2 |
| தேவா உன் திருப்புகழ் பாட | | தென்னோர் பண்ணுந் திறமுங்கூட (அன்பே) |
|
3 |
| தீங்கே விளைத்திடுஞ் சொல்லெலாம் | | தீரவருள் தீந்தமிழிலே (அன்பே) |
|
இதிலுள்ள அளபெடைகள் வருமாறு :* |
ப. - அஅன்பேஎ. |
து. ப. - இஇன்பேஎ. |
அ. 1. எஎங்குஉம். இறைவாஆ. எழிலாஅர். |
2. தேஎவாஆஆ. தெஎன்னோஒர். திறமுஉம் |
3. தீஇங்கேஎ. சொஒல். தீஇருஉம். தீஇம். |
(குற்றுயிர் அடுக்கியிசைப்பது குறிலடுக்கிசையாம் |
நெடில் அளபெடுத்தல் உயிரளபெடையாம். |
அஅன்பே - குறிலடுக்கு |
அன்பேஎ - உயிரளபெடை - பதிப்பாசிரியர்) |
*குறிப்பு: இப் பாட்டு இசைமாணவர்க்கென்றே இயற்றப்பட்டது. தனித்தமிழ்ப் பாட்டை விரும்புவார் இதைப் பாடலாம். |
6. இசையின்பம் |
|
'கொலுமவரெகத' என்ற மெட்டு |
பண்- (தோடி) தாளம் - முன்னை |
ப |
| இசையினும் இன்பம் வேறுண்டோ எவ்வகை யுயிர்க்கும் |
|
து. ப |
| வசையற வாழுலகில் வழங்கறம் இரண்டிலும் | | இசைபெற ஈரின்பமும் இருமடி யாக்கும் (இசை) |
|