பக்கம் எண் :

4இசைத்தமிழ்க் கலம்பகம்

அ. 1
எங்கும் நிறை இறைவா உன்றன்
   எழிலார் கழல் இணைபணி கின்றேன்     (அன்பே)
2
தேவா உன் திருப்புகழ் பாட
   தென்னோர் பண்ணுந் திறமுங்கூட        (அன்பே)
3
தீங்கே விளைத்திடுஞ் சொல்லெலாம்
   தீரவருள் தீந்தமிழிலே                 (அன்பே)
            இதிலுள்ள அளபெடைகள் வருமாறு :*
            ப. - அஅன்பேஎ.
            து. ப. - இஇன்பேஎ.
                அ. 1. எஎங்குஉம். இறைவாஆ. எழிலாஅர்.
                 2. தேஎவாஆஆ. தெஎன்னோஒர். திறமுஉம்
                 3. தீஇங்கேஎ. சொஒல். தீஇருஉம். தீஇம்.
                (குற்றுயிர் அடுக்கியிசைப்பது குறிலடுக்கிசையாம்
                நெடில் அளபெடுத்தல் உயிரளபெடையாம்.
                அஅன்பே - குறிலடுக்கு
                அன்பேஎ - உயிரளபெடை - பதிப்பாசிரியர்)
                *குறிப்பு: இப் பாட்டு இசைமாணவர்க்கென்றே இயற்றப்பட்டது. தனித்தமிழ்ப் பாட்டை விரும்புவார் இதைப் பாடலாம்.
6. இசையின்பம்
'கொலுமவரெகத' என்ற மெட்டு
பண்- (தோடி)                
தாளம் - முன்னை
இசையினும் இன்பம் வேறுண்டோ எவ்வகை யுயிர்க்கும்
து. ப
வசையற வாழுலகில் வழங்கறம் இரண்டிலும்
   இசைபெற ஈரின்பமும் இருமடி யாக்கும்       (இசை)