பக்கம் எண் :

52இசைத்தமிழ்க் கலம்பகம்

59. மொழித் திருத்தத்தின் தேவை
(இசைந்த மெட்டிற் பாடுக)
மொழியென்ப தொருவன்றன் உளமுள்ள நினைவேனோர்
             உணரச்செய் ஒலியென்பதே
வழுவென்றும் இயலென்றும் தமிழென்றும் பிறிதென்றும்
            வரைசெய்தல் தகுமோ என்பார்.
2
உணவென்ப தொருவன்றன் பசிதீர எதும்வாயுள்
             இடலாகும் பொருளென்பதோ
மணமுள்ள சுவையான பதமாக நலமேவ
             முறையோடும் விளைவுண்பதோ.
3
உயிரெல்லாம் உணவாடை உறையென்னும் இவைமூன்றும்
             ஒருதன்மை யெனவாகுமே
உயர்வான திணையென்னும் மகனோதன் வினையெல்லாம்
             உயர்வாகச் செயல்வேண்டுமோ.
60. தமிழ்க் கல்விப் பயன்
'எனக்குன் இருபதம் நினைக்க வரமருள்வாய்' என்ற மெட்டு
பண் - (சௌராட்டிரம்)
தாளம் - முப்புடை (திரிபுடை)
ப.
தனித்த மொழி யெனும் இனித்த தமிழ்அறிவாய் - பண்ணாருந் தெய்வத்
தனித்த மொழி யெனும் இனித்த தமிழ்அறிவாய்
உ.1
பனித்த குமரியில் துனித்த துறவியல்
    முனித்தவரை யுளங் கனித்துலகு நடுக்
குனித்த சிவனுங்க வனித்தறிவரொடு
    நுனித்த இசைநடத் துனிப் பயிலுமுத்
(தனித்த)