பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்55

2
பேதைமையா லும்மதப் பித்தத்தினா லும்இனப்
    பிரிவினை யாலும்கெட்டுத் தாழ்ந்த பின்னே
மேதகை தமிழனே மீண்டும்பெற வள்ளுவன்
    மேலாம் வழிவகுத்தான் சூழ்ந்து முன்னே
(நாவலந்)
3
தென்முது நூலெல்லாம் வடமொழிப் பெயர்ந்தபின்
    தென்னவர் மடமையால் தீர்ந்தனவே
இந்நிலை வடமொழி யிருக்கின்ற நூலெல்லாம்
    ஏனையர் நூலெனத் தோன்றுபவே
(நாவலந்)
63. குமரிநாட்டுச் சிவன் மால் வழிபாடு
பண் - (தன்னியாசி)
தாளம் - முன்னை
'கனகசபாபதி தரிசனம் ஒருநாள்' என்ற மெட்டுவகை
ப.
குமரிநாடே முதலிற் குறிஞ்சி முல்லை நிலத்தே
     குமரன் மால் வழிபாடாம்.
து. ப.
தமிழன்மதம் இவையே தகுமொரு சான்றிதுவே
    அமையும் இதை யறியாராயினே கழி கேடாம்
(குமரி)
உ.1
சமயம்என்னும் சொல்லையும் சமற்கிருதமே என்பார்
    சாய்ந்துபின் வேறென் சொல்லார்
சமைஎன்னும் முதலையும் அமைஎன்னும் அடியையும்
    அமைய நோக்கியே பாரும் அம்என்னும் அடிவேரும்
(குமரி)
2
வேள்வி வணக்கமதே ஆரிய மதமென்று
    கேள்வி மறையே புகலும்
ஆள்வினைத் தமிழரும் ஆற்றிய பூசனைகள்
    ஆரிய மொழியேனும் ஆமோ தெய்வம் அயலும்
(குமரி)