பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்57

4
சிவனொடு மாயவன் சென்றநாள் குமரியில்
     செந்தமிழ ரேதொழும் தென்றமிழ்த் தெய்வம்
அவமுற இரண்டும்பின் ஆரிய மெனவே
     ஆக்கினர் அதனைநாம் மாற்றவே செய்வம்
(கோயில்)
5
ஏமுறும் வடமொழி இழுக்குற வொலித்திடின்
     இன்னலே தருமென ஏமாற்றி வருவர்
தேமுறு தமிழிலே திண்ணிய மனத்துடன்
     தெய்வத்தைப் போற்றிடின் திருவருள் பெருகும்
(கோயில்)
6
கண்ணப்பன் வழிபாடு காளத்தி மலையிலே
     கண்ணுதல் மகிழுறப் பண்ணினன் தமிழே
பின்னப்பன் சம்பந்தன் சுந்தரன் முதலோர்
     பேணிய மொழியெண்ணிப் பேரின்பத் தமிழே
(கோயில்)
65.இந்து என்னும் சொல் ஏற்புடையதாகாமை
'பண்டித மோத்திலால் நேருவை' என்ற மெட்டு
இந்துமதம் என்றே தனியொன் றெதுவு மில்லையே
                    எதுவு மில்லையே - அது
                    முதிய தொல்லையே.
உ.1
மித்திரன் வருணன் முதலாய் வேறு தெய்வம் ஆரியர்க்கே
எத்திறமும் சிவன் திருமால் இலைய வற்றுள்ளே
                    இலைய வற்றுள்ளே - தனி
                    நிலையும் மற்றுள்ளே
(இந்து)
2
வேள்வியிலே காவையிட்டு விண்ணிற் சிறு தெய்வங்களை
வேண்டுவதே ஆரியமதம் வேறெதுமில்லை
                    வேறுறெதுமில்லை - வீடு
                    பேறு தென்னெல்லை
(இந்து)