|
4 |
| சிவனொடு மாயவன் சென்றநாள் குமரியில் | | செந்தமிழ ரேதொழும் தென்றமிழ்த் தெய்வம் | | அவமுற இரண்டும்பின் ஆரிய மெனவே | | ஆக்கினர் அதனைநாம் மாற்றவே செய்வம் (கோயில்) |
|
5 |
| ஏமுறும் வடமொழி இழுக்குற வொலித்திடின் | | இன்னலே தருமென ஏமாற்றி வருவர் | | தேமுறு தமிழிலே திண்ணிய மனத்துடன் | | தெய்வத்தைப் போற்றிடின் திருவருள் பெருகும் (கோயில்) |
|
6 |
| கண்ணப்பன் வழிபாடு காளத்தி மலையிலே | | கண்ணுதல் மகிழுறப் பண்ணினன் தமிழே | | பின்னப்பன் சம்பந்தன் சுந்தரன் முதலோர் | | பேணிய மொழியெண்ணிப் பேரின்பத் தமிழே (கோயில்) |
|
65.இந்து என்னும் சொல் ஏற்புடையதாகாமை |
|
'பண்டித மோத்திலால் நேருவை' என்ற மெட்டு |
ப |
| இந்துமதம் என்றே தனியொன் றெதுவு மில்லையே | | எதுவு மில்லையே - அது | | முதிய தொல்லையே. |
|
உ.1 |
| மித்திரன் வருணன் முதலாய் வேறு தெய்வம் ஆரியர்க்கே | | எத்திறமும் சிவன் திருமால் இலைய வற்றுள்ளே | | இலைய வற்றுள்ளே - தனி | | நிலையும் மற்றுள்ளே (இந்து) |
|
2 |
| வேள்வியிலே காவையிட்டு விண்ணிற் சிறு தெய்வங்களை | | வேண்டுவதே ஆரியமதம் வேறெதுமில்லை | | வேறுறெதுமில்லை - வீடு | | பேறு தென்னெல்லை (இந்து) |
|