பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்63

(அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலம்)
மொழியோடு போவ தில்லை முத்தமிழ் அழியின் மும்மா
விழிதரும் அறிவி யல்கள் வியனிலம் மயங்கு வண்ணம்
அழிவுறும் அதனால் மேலை றிஞரே தமிழைக் காக்க
பழிமிகும் இழிவை நச்சும் பதர்களே தமிழர் மன்னோ.
72. மொழி வாழிடம் மக்கள் வாயே
பண் - (காப்பி)
தாளம் - முன்னை
சித்தார் வண்ணம்
1
தமிழ் - வாழ்வது தமிழர் வாயினிலே
அவர் - வழங்கா விடின்அது மாய்ந்துவிடும்
எந்த - வாழ்மொழியும் மக்கள் வாயொலியே
தனி - வடிவ மன்றுபெரு வாய்மையிதே.
2
தமிழ் - பெருமொழியே கெடப் பெறுவதில்லை
என்று - பேசுவதோ மிகப் பெரு மடமை
முதல் - வறுமொழியாய் வந்த வடமொழியால்
தமிழ் - வளமை யெல்லாங் கெட்டு வறண்டதுவே.
3
முனம் - ஆங்கிலத்தால் தமிழ் அழிந்ததோ பார்
இனி - ஈங்கிந்தியும் வரின் இறவாதென்பார்
அந்த - ஆங்கிலம் தமிழையோ அழித்ததில்லை
ஆயின் - ஈங்குள்ள ஆரியம் அழிப்பதுவே
4
இன்று - நாட்டிலே வழங்கும் நடையறிவார்
தமிழ் - கேட்டை யடையுமென்று கிளந்திடுவார்
இதை - மாற்றி யுரைப்பவரோ மொழியறியார்
விளக் - கேற்றிய தறியவரோ விழிதெரியார்.