|
5 |
| தாயையுங் கொல்லவே தயங்கார் சிலர் - அவர் | | தாய்மொழி யைக்கொல்லத் தாராளமே - கொள்வர் | | பாராளவே - கொடுங் | | |
|
6 |
| தமிழறியார் தமிழ் அதிகாரிகள் - எனத் | | தான்றோன்றித் தனமானத் தருக்கி யின்றே - மிகச் | | செருக்கி நின்றார் - உரை | | பெருக்குகின்றார் (வழங்) |
|
7 |
| தமிழொன்றே உலகத்தில் தனிமொழியாம் - அதன் | | தனிச்சொல்லை வீழ்த்த வந்தன வடசொல் - அங்ஙன் | | வீழ்ந்த சொல்லை - நாமே | | மீண்டும் கொள்வோம் (வழங்) |
|
74. அயன்மொழி யெழுத்தை யகற்றல் |
|
(இசைந்த மெட்டிற் பாடுக.)1 | | அயன்மொழிச் சொற்களைப் போன்றே | | அயன்மொழி யெழுத்தும் வேண்டா | | இயலறி தமிழச் சான்றோர் | | இயல்தமி ழெழுத்தே ஆண்டார். |
| 2 | | ஒற்றரே வருவது முன்னே | | உறுபடை வருவது பின்னே | | மற்றொரு மொழியெழுத் தின்னே | | மருவிடின் சொலும்வரும் மன்னே. |
| 3 | | வடசொல் தமிழெழுத் தாலே | | வழங்குக வென்றது நூலே | | குடசொல் ஒன்றிலை மேலே | | குறித்ததொல் காப்பியக் காலே. |
| | |