பக்கம் எண் :

80இசைத்தமிழ்க் கலம்பகம்

3
உலகெல்லாம் தனியேஓர் குடையின்கீ ழாண்டாலும்
     உம்பர் மாதர்என்றும் தொண்டாற்றி வந்தாலும்
இலகும்நூல் ஒன்றின்றி இகலாரியம் சாலும்
    இந்தியை இந்நாட்டில் இனியும் ஏற்று மேலும்
(தமிழைப்)
90. தாய்மொழிப் பற்றின்றித் தாய்நாட்டுப் பற்றின்மை
'மாற்றறியாத செழும்பசும் பொன்னே' என்ற மெட்டு
பண் - சுருட்டி
தாளம் - சார்பு
1
தாய்மொழிப் பற்றில்லாத் தன்னாட்டுப் பற்றே
     தன்னினங் கொல்லவே தான்கொண்ட புற்றே
ஆய்மதப் பற்றில்லா அடியார்பற் றுண்டோ
    ஆண்டவன் தளியிடித் தவரைக்காப் பின்றே.
2
தானேயெங் குஞ்செல்லின் தன்னாடும் வருமோ
    தன்மொழி விட்டுமே தான்சொல்லப் பெறுமோ
பூனைக ளேஉற்ற இடத்தோடும் ஒன்றும்
    புல்லிய விலங்குபோல் ஒழுகுதல் நன்றோ.
3
மொழியினா லேமாந்தர் இனமொன்று தோன்றும்
    இனம்பர வியஇடம் நாடாமெஞ் ஞான்றும்
மொழியொன் றில்லாமலே இனமொன்று மில்லை
    இனமொன்றில் லாமலே நாடென்று மில்லை.
4
நாட்டுப்பற் றொன்றையே நலமென்று சொல்வார்
    நாயகமா யுள்ள மொழியொன்று கொல்வார்
வேற்றுப் புலத்தவ ரேயிது செய்வார்
    வேடர்போ லேஅறி வில்லார்மீ தெய்வார்.