|
உ.1 |
| முன்னாளில் தான்கல்வி முறையின்றிக் கண்கள் | | மூடியிருந் தேதும் முன்னேற்றமே யில்லை | | இந்நாளிலே எத்துணையோ கற்றும் | | ஏனையவுயர் நாடுகண்டும் ஏன் தொல்லை (தன்) |
|
2 |
| தொழில் எதுவேனும் துப்புர விருந்தால் | | தோழமை கொண்டன்பாய் மேலையரின் றுண்பார் | | எழில் வெண்ணிறம் ஏத்துங்குல வேலை | | இருந்துந் தமிழரைப் பிறர்இழி வென்பார் (தன்) |
|
3 |
| மூவேளை முழுகிப் பூவாடை புனைந்து | | முடையூனை விண்டு முகமணம் பூசித் | | தூவாழ்வையே தொடர்ந்து மேற்கொண்டுந் | | துப்புரவில்லை தமிழன் என்பார் ஏசி (தன்) |
|
132. பிராமணர் நிலத்தேவரன்மை |
|
'சங்கம் முழங்குந் தமிழ்' என்ற மெட்டு |
ப. |
| இன்னுந் தமிழனுக்கே இந்திய ஆரியரை | | இந்நிலத் தேவரென்றே எண்ணும் மயக்க முண்டோ |
|
து. ப. |
| மன்னும் அறிவியலால் உண்மை விளங்கியிரு | | கண்ணுந் திறந்துகொண்ட பின்னும் பேதைமையென்னே. (இன்னும்) |
|
உ.1 |
| வெண்மை நிறத்தவரை விண்ணவரென்று கொள்ளின் | | வெற்றி பெறுவார் அமெரிக்கர் ஐரோப்பியரே | | வன்மை யொலிகள் தெய்வத்தன்மை யுறுவவெனின் | | வண்ணான் கழுதைபெற வொண்ணும் வழிபாடரோ (இன்னும்) |
|