பக்கம் எண் :

116இசைத்தமிழ்க் கலம்பகம்

133. ஏமாறுந் தமிழன்
'மாயப்பிர பஞ்சத்தில்' என்ற மெட்டு
1
தமிழன்போல் ஏமாறிதான் இங்குவே றில்லை
     தன்மானம் இழந்துபின் தவிப்பானும் வேறில்லை
இருண்ட நாடுகளும் முன்னேறிய காலம்
    இரசியர் அமெரிக்கர் பரவெளிக் கோலம்
இன்னும் கையாலே பஞ்சின் இழையதை நூற்று
    இந்திக் கட்டாயக்கல்வி இருகையால் ஏற்றுத்
தாய்மொழி யாம்தமிழ் தாழ்ந்து கெடும் - அந்தத்
    தறுவாயும் அயல்வட மொழியினில் வழிபடும்
(தமிழன்)
2
வெண்ணிற வடவரின் வெடிப்பொலி கண்டு
    விண்ணவர் மொழியென்று விரும்பியே கொண்டு
முன்னாளில் மடமையால் மூவேந்தர் வணங்கினும்
    இந்நாளி லும்அதை ஏற்பது நன்றோ
திண்ண மாய்அது தமிழ்த்திரிபு கண்டீர் - இந்த
    உண்மையை உணர்ந்தபின் உளந்திருந்துவீர் இன்றே
(தமிழன்)
134. தமிழன் அடிமைத்தனம்
'இது அதிசயமே' என்ற மெட்டு
ப.
இது வியப்பதொன்றே இன்னும் விளங்காததே - பர
    வெளிபுகுங் காலத்திலும் - பகல்
     விழிகுருடெனவுள தமிழன் நிலை.
உ.1
நயத்தகு தமிழ்மத நாகரிகம்
    நானில முதலென நன்கறிந்தும்
மயக்கமுடன் அரைச்செயற்கை யாகும் - அயல்
    வடமொழி வழிபட வழங்குவதே.
(இது)