|
2 |
| கிளிப்பிள்ளைக் கொருமொழி பலமுறையும் | | கிளப்பது போலநக் கீரன்முதல் | | சீரியா ரேபலர் கூறிவந்தும் - வட | | ஆரியம் உயர்வெனத் தேறுவதே. (இது) |
|
3 |
| அறிவியற் கலைபல ஆய்ந்தறிந்தும் | | ஆடையைத் தூயதாய் அணிந்திருந்தும் | | ஆரிய னேஉடல் தூயனென - மதி | | மாறிய தமிழனே தாழுவதே. (இது) |
|
135. தமிழில் எடுப்பொலி யில்லை யென்பாரின் தாழ்நிலை |
|
பண் - (செஞ்சுருட்டி) தாளம் - முன்னை |
ப. |
| கண்கவர் வண்ணம் ஒட்டிற் கிலையென்றே - புளிங் | | காட்டுமாங் கனியுண்ணுங் காட்டானே |
|
து. ப. |
| பண்படு தமிழ் எடுப்பொலி யில்லை - என்றே | | பாட்டின் பொருளறிய மாட்டானே (கண்) |
|
உ. |
| சின்னஞ்சிறுவர் எனச்சிறு பண்பே - மிகச் | | சீரியதென்று கொள்ளுஞ் சிறியோனே | | தன்னந்தனியே திருக்குறள் கோவை - முதல் | | தமிழ்நூலின் இன்னோசை கேட்டறி யானே (கண்) |
|