|
136. தமிழைத் தமிழனே தாழ்த்துதல் |
|
'உன்னைக் கண்டு மயங்காத' என்ற மெட்டு |
ப. |
| தமிழ்நாடுபோற் கேடுகொள் நாடுமுண்டோ. |
|
உ.1 |
| தன்சொலைத் தாழ்வெனத் தள்ளியே வடசொல் | | விண்சொலென வியந்து விரும்பியுற. (தமிழ்) |
|
2 |
| உடைய மதம்தமிழ் உரிமையா யிருக்க | | வடமொழி தனிலே வழிபடவே. (தமிழ்) |
|
3 |
| சிற்றடி மைத்தனம் செற்றுரி மையென | | முற்றடி மைத்தனம் பெற்றிடவே. (தமிழ்) |
|
137. தமிழர் பேதைமை |
|
'மார்கழி மாதம் திருவாதிரை நாள்' என்ற மெட்டு |
1 |
| வீட்டவர் இளைக்கவும் வேற்றவர் கொழுக்கவே | | வேளாண்மை செய்வார் | | கோட்டியர் போலத்தம் குடும்பத்தைக் கொன்றிடும் | | கோளாறே மெய்பார். |
|
2 |
| நாட்டவர் பசியினால் நைந்தெதிர் நிற்கவும் | | நண்ணி வேற்றவரைக் | | கூட்டிவந் தவரடி கும்பிட்டு வீழ்ந்துபின் | | கொடுப்பார் கேட்டவரை. |
|
3 |
| விருதுநகர் செல்லும் வினையதை என்னது | | வீடுவரை யின்றே | | வருகவென் றதுபோல வம்பலரை வேந்தர் | | வரவழைத்தார் பண்டே. |
|