பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்119

4
தன்மையும் தனிமையும் தலைமையும் தழுவிய
    தாய்மொழியைத் தள்ளிப்
புன்மையும் புதுமையும் புரைமையும் புணர்மொழிப்
     போலியை மேற்கொள்வார்.
5
முழுமுதற் கடவுளை வழிபடும் விழுமிய
     முதுபழ மதமிருக்க
வழுவிய கருத்தினாற் கெழுமிய சிறுதெய்வத்
     தொழுகையே புரிந்திடுவார்.
138. பிராமணியம்
'பச்சைமலை பவழமலை' என்ற மெட்டு
1
ஆரியம்பி ராமணியம் ஆயிரண்டும் ஒன்றே
சாரும்ஒரு சார்தமிழர் சார்புகொண்டு நின்றே.
2
ஆரியப்பி ராமணரும் அவர்வழியி னோரும்
பாரிலுள்ள தேவரெனல் பிராமணியம் பாரும்.
3
ஆரியப்பி ராமணரைத் தேவரென்ற தானே
அவர்மொழியும் தேவமொழி யாயினது தானே.
4
அறுப்பவனை நம்புகின்ற ஆடுபோன்ற தமிழர்
திருக்குறளை நம்பாது திறனிழந்தார் திமிறி.
5
பல்வேள்விச் சாலைமுது குடுமிப்பெரு வழுதி
வல்லோசை வடமொழியை வளர்த்துவிட்டான் வழுவி.