பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்121

2
குன்றேபோலும் யானையைக் கொல்லவொண்ணும் எளிதாய்க்
    கொடும்பெருஞ் சுடுகலம் கொண்டே குறுமகனும்
குன்றாத அதிகாரம் குடவோலையாற் குடிகள்
     கொடுத்தபின் கொண்டவரைக் குறைகூறுவ தெங்ஙனம் (என்றும்)
3
குட்டக்குட்டக் குனிந்து கொடுக்கின்றவனும் முட்டாள்
     குனியக்குனிய மேலுங் குட்டுபவனும் முட்டாள்
இட்டுக்கட்டி மேன்மேலும் ஏமாற்றுவோனும் முட்டாள்
     என்றும் தெளியாமலே ஏமாறுவோனும் முட்டாள் (என்றும்)
4
இருவர் இணைந்து செய்யும் இழுக்கான செயலிலே
     ஒருவரையே கடிந்தால் ஒருபக்க மான குற்றம்
அரிய தமிழ்த் தொண்டுகள் அழகாய்ப் பிராமணரே
    ஆற்றியுள்ளார் சிலரும் தூற்றாதீர் குலம் முற்றும் (என்றும்)
140. தமிழப் பிராமணரைக் கெடுப்பவர் தமிழரே
'மகமதியர் குலத்தில்' என்ற மெட்டு
1
தமிழப் பிராமணரைத் தமிழரே கெடுக்கின்றார்
    தந்நலமாயிந் நாளுமே - இன்றேல் அவர்
    தாமாய்த் திருந்த ஏலுமே.
2
இருபதாம் நூற்றாண்டிலும் ஏமாற்றுத் தொழிலிலே
    ஈடுபடுத்தி யவர்மேல் - இழிவையே
    ஏற்றிவிடுமே இவர்கோள்.