பக்கம் எண் :

122இசைத்தமிழ்க் கலம்பகம்

3
ஆரியத்தை யுயர்த்தி அரிய தமிழைத் தாழ்த்தும்
    பேராசிரியர் அடிமைத் - தனம்பிறர்
    பின்பற்றினாரே குடிமை.
4
கலப்பு மணத்தினிலும் குலத்தை யொழிப்பதிலும்
    நலத்துறை பிறிதிலுமே - பிராமணர்
     நாயகர் எனச் சொலுமே.
5
தன்மான மொன்றுமின்றித் தன்னையே தாழ்த்திநின்று
    தானாகத் தமிழன் கெட்டால் - பிராமணர்
    தாமோ பொறுப்பதற் குற்றார்.
6
காலத்தோ டிடத்திற்கும் சாலத்தகுந்த மட்டும்
    கோலத்தைப் பூண எவரே - பிராமணர்
    போலத்தான் காணுபவரே.
 
141. கொடை மடம்
பண் - (காம்போதி)
தாளம் - ஈரொற்று
ப.
கொடைமடம் முற்றியின்று கூர்கெடும் தமிழ்நாடு
கொடிமயிலும் பெற்றில்லை கோலத்தேர் போர்வையோடு
து. ப.
படைமடமுற் றுத்தமிழ் பழுதுபட்ட பிற்பாடு
பாவலர் பட்டபாடு பகரவே பற்றா தேடு
(கொடை)
1
இலக்கண மறியாமல் எதுகைநடை வலித்தால்
    எங்கெங்கும் பொன்னாடைகள் ஏராளமாய்க் குவியும்
மலக்கமில் தனித்தமிழ் மறைமலை யடிகளின்
    மாணுறு நூலுன் ஒன்றைக் காணவும்கண் அவியும்.
(கொடை)