|
(உரைப்பாட்டு) |
| இருந்த நாளெல்லாம் எரிவாயிருந் தெல்லையிலாத் துன்புற்றே | | இறந்தபின் அமைதியுற் றிருக்கும் நிலையே | | பொருந்தாத முறையில் ஒளிப்படங்கட்குப் பூச்சாத்தி வணங்குதல் | | புண்படுத்துவதன்றி ஒரு பயன் இலையே. (ஏன்) |
|
145. அத்திலீபின் ஆராயாச் செயல் |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
ப. |
| அத்திலீப் பெருமகன் ஆட்சி | | அத்திலா மரபறு மாட்சி. |
|
து. ப. |
| மெத்திய அரசியல் சூழ்ச்சி | | மெத்தவும் இருதலை வீழ்ச்சி (அத்திலீப்) |
|
உ.1 |
| இந்தியா இருதுண் டாக | | இன்னலும் எல்லை போகப் | | பிந்தியும் அமைதி ஏகப் | | பிணங்கிய நிலையிற் சாக. (அத்திலீப்) |
|
2 |
| சிறிதும் பொறுப்பில் லாது | | சிக்கல் களைத்தீர்க் காது | | வறிதே வடவர் மீது | | வைத்தார் நாவலம் தீது (அத்திலீப்) |
|
3 |
| எளிதாய்ப் பேர்பெற எண்ணி | | ஈந்தார் விடுதலை அண்ணி | | வலிதாய்க் கூடப் பண்ணி | | வகுத்தார் வழிவழி கண்ணி. (அத்திலீப்) | | அத்து - வழி, பொருத்தம். | | மரபுறு - மரபறுத்த |
|