பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்127

இந்திய வொருமைப்பா டென்றூக்கி - வர
எந்தமி ழயிரையும் இனிநீக்கி.
(இந்திய)
2
சமற்கிருதக் குழு அமைத்திட்டார் - பின்பு
சாப்பிள்ளை மணியணை தனிலிட்டார்
திமித்திமி யெனப்பணம் செலவிட்டார் - எந்தம்
தீந்தமிழ்தனை நடுத்தெரு விட்டார்.
(இந்திய)
3
விடுதலை விழவினில் மொழி மூன்று - பெரு
வேத்தியற் சிறப்புறும் பல்லாண்டு
அடிதலை தடுமாறும் அயல்ஈண்டு - மிக
அகத்தவர் பசிக்கவே விருந்தான்று.
(இந்திய)
148. தமிழனுக் குரிமையின்மை
(இசைந்த மெட்டிற் பாடுக)
1
ஆங்கில ஆட்சியே நீங்கிய விடுதலை
ஊன்றிய வேனிலில் தோன்றிய கானலே.
2
ஈரடி மைத்தனம் இன்றமிழ் நாட்டிலே
ஆரியம் ஆங்கிலம் ஆம்பெயர் சாற்றினே.
3
ஆங்கிலத் தினுமிக ஆரியம் கொடியது
பாங்கவை எறும்பையும் பாம்பையும் நிகருமே.
4
உடலையே பிணித்திடும் ஓங்கிய ஆங்கிலம்
உளத்தையும் பிணிப்பதே ஊன்றிய ஆரியம்.
5
ஆரியத் தால்விலங் கானவன் தமிழனே
ஆங்கிலத் தாற்பினும் ஆயினன் மாந்தனே.