பக்கம் எண் :

128இசைத்தமிழ்க் கலம்பகம்

6
ஆங்கிலத் தோடேயே ஆரியம் நீங்கிடின்
ஓங்கிய தமிழனுக் குண்மையாம் விடுதலை.
7
ஆங்கிலத் தின்பினே ஓங்கின தாரியம்
ஈங்கே தமிழ்கெட இந்தியும் வந்ததே.
8
மாணுறு தமிழகம் காணுமிந் நிலையினில்
சாண்முனே யேறியும் சறுக்கின தொருமுழம்.
9
தமிழனுக் குரிமையே தமிழ்கெடின் இல்லையே
இமிழ்கடல் சூழ்நிலம் இருப்பது தொல்லையே.
10
உரிமையொன் றின்றியே உளதுபோற் காப்பதும்
அவலை நினைத்துவெற் றுரலையி டிப்பதே.
 
149. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை
'வந்தே மாதரமே' என்ற மெட்டு
ப.
தமிழன் விடுதலை தமிழின் விடுதலையே.
து. ப.
இ(ம்)மியும் உரிமையில்லை இ(ன்)னுந்தமிழக எல்லை
(தமிழன்)
அ.
இந்தியாவில் விடுதலை இந்திநாடே பெற்றது
ஏனைய திராவிடங்கள் ஏதோ சிறிதுற்றன
இருட்கண்ட நாடுகளும் இன்று - மிக
ஏற்றமான விடுதலை கண்டு
எக்களிக்கும் நேரம் இந்தியத் தென்னோரம்
தத்தளிக்க நேரும் தமிழர் எல்லாரும்
(தமிழன்)